தடுமாறி வெற்றி பெற்ற இந்தியா அணி

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் இந்தியா, கொல்கொத்தா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி போராடி 04 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா அணி இலகுவாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா அணியின் ஆரம்ப விக்கெட்களை வேகமாக கைப்பற்றி இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்தனர்.

இறுதியில் இந்தியா அணி 43.1 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை அதிகமாக பெற தவறியமை இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.

முதல் நான்கு விக்கெட்களையும் தொடர்ச்சியான இடைவெளிகளில் இந்தியா அணி இழந்தது. 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து இந்தியா அணியினை மீட்டு எடுத்தனர். பாண்ட்யா 36(53) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அக்ஷர் பட்டேல், ராகுல் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தினார். அவர் 21(21) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். வெற்றியினை அண்மித்த நிலையில் அவர் ஆட்டமிழக்க இந்தியா அணிக்கு வெற்றி பெறுவது இலகுவானது. நிதானமாக இறுதி வரை துடுப்பாடிய லோகேஷ் ராகுல் 64(103) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று இந்தியா அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

ஷ்ரயாஸ் ஐயர் 28(33) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் இந்தப் போட்டியில் இணைக்கப்பட்ட லஹிரு குமார மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். தனஞ்சய டி சில்வா, கஸூன் ரஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றது.

பத்தும் நிஸ்ஸங்க உபாதையடைந்துள்ள நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பாக ஆரம்பித்த போதும் 20(17) ஓட்டங்களோடு வேகமாக ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அறிமுக போட்டியில் துடுப்பாடிய நுவனிது பெர்னாண்டோ, குஷல் மென்டிஸ் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை மேற்கொண்டனர். 34(34) ஓட்டங்களை பெற்ற நிலையில் மென்டிஸ் ஆட்டமிழக்க 73 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் வருவதும் போவதுமாக வீரர்கள் ஆட்டமிழந்தனர். நுவனிது பெர்னாண்டோ தேவையற்ற ஓட்ட முயற்சியினால் 20(63) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.

வனிந்து ஹசரங்க அதிரடியாக ஓட்டங்களை பெற்ற போதும் 21(17) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் டுனித் வெல்லாளகே, கஸூன் ரஜித ஆகியோர் 48 ஓட்டங்களை ஒனபதாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர். டுனித் வெல்லாளகே 32(34) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரஜித ஆட்டமிழக்காமல் 17(21) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். சாமிக்க கருணாரட்ன 17(21) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். இருவரும் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள். உம்ரன் மாலிக் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்தியா அணியின் சிறப்பான பந்துவீச்சும், இலங்கை அணியின் நுட்பமற்ற மோசமான துடுப்பாட்டமும் மீண்டும் ஒரு தடவை இந்தியா அணிக்கு வெற்றியினை வழங்கியுள்ளது.

தடுமாறி வெற்றி பெற்ற இந்தியா அணி

Social Share

Leave a Reply