பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் இன்று மதியம் (17.01) கொழும்பு 7  குதிரை பந்தய திடலில் (ரேஸ் கோர்ஸ் மைதானத்தில்)  கண்டெடுக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் உள்ள புள்ளி பலகைக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞான பீட மாணவி எனவும் தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version