இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 2,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 9ம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த அளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 452 தொற்றாளர்கள் எனும் அதிகளவிலான எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, கம்பஹா மாவட்டத்தில் 417 தொற்றாளர்கள் இனக்காணப்பட்டுள்ளனர்.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் 257 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 123 பேரும், கல்முனை பகுதியில் 107 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 103 பேரும் டெங்கு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இந்த வருடம் இதுவரையில் 4,172 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
