பிங்கிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் விலத்தாவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்டதில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகமடைந்து குறித்த லொறியை சோதனையிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதில், பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய 89 பிளாஸ்டிக் குழாய்கள், 80 அடி நீளமுள்ள 21 சர்வீஸ் ஸ்டிரிங்ஸ், தலா 100 டெட்டனேட்டர்கள் அடங்கிய 9 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (24.01) ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
