இலங்கைக்கு முன்னுரிமை வழங்க ஜப்பான் தயார்!

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் திரு.மசாடோ கனிடா தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்கு பேசிய அவர், நடுத்தர வருவாய் நாடுகளின் கடன் நெருக்கடிக்கு சர்வதேச தீர்வு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஜப்பான், பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு முன்னுரிமை வழங்க ஜப்பான் தயார்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version