வாழைப்பழ வகைகள் உட்பட இலங்கையின் பழங்களை சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணித் திட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக சீன அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் விளைவிக்கப்படும் பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக கமநல சேவை திணைக்களத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சீன பிரதிநிதிகள் மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
“நம் நாட்டில் பயிரிடப்படும் கேவன்டிஷ் வாழை வகைகளும் அன்னாசி, மாம்பழம், பேரீச்சம்பழம் மற்றும் புளி வாழைப்பழங்கள், அத்துடன் புளிப்பு சீத்தாப்பழங்கள் (காட்டு அனோதா) ஆகியவை உலகளவில் பல நாடுகளில் பிரபலமாக உள்ளன, மேலும் நம் நாட்டில் விளையும் பழங்களை பல தனியார் நிறுவனங்கள் தற்போது ஏற்றுமதி செய்கின்றன ” என அமைச்சர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழைப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பல வருடங்களுக்கு முன்னர் சீன மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை. எனவே, மீண்டும் திட்டத்தை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் (ASMP) இலங்கை ஒவ்வொரு சனிக்கிழமையும் துபாய் சந்தைக்கு 12,500 கிலோ புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்கிறது. தரமான புளிவாழைப்பழம் துபாய் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் விளைவிக்கப்படும் பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
