தேர்தல் பணியாளர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் அதிகாரிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

“நான் இந்த கோரிக்கையை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திடமும் ஒட்டுமொத்த அரசாங்கத்திடமும் முன்வைத்துள்ளேன், தற்போது அது தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எங்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணியாளர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை!

Social Share

Leave a Reply