போலி கடவுச்சீட்டு வியாபாரம்!

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பண மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் நேற்று (31.01) குறித்த சந்தேகநபர்கள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து முறைப்பாடு செய்த இருவரின் தேசிய அடையாள அட்டைகளும் 15,000 ரூபா பணம் மற்றும் 9 போலி கடவுச்சீட்டில் தயாரிக்கப்பட்ட பற்றுசீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 65 வயதுடைய மாலபே மற்றும் கொழும்பு 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (01.02) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

போலி கடவுச்சீட்டு வியாபாரம்!

https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply