மின் துண்டிப்பு இல்லை – மின்சார சபை!

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாளைய தினம் (03.02) மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

உயர்தர பரீட்சை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என தெரிவித்த போதிலும், மின் துண்டிப்பை அமுல்படுத்தியமை தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிரித்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே நாளைய தினம் (03.02) மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பு இல்லை - மின்சார சபை!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version