அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 40 மில்லியன் டாலர்களை வென்ற பெண் ஒருவர் குறித்த செய்தியை ஆஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் பெரும் பணத்தொகையை வென்றுள்ளார்.
மேலும், இந்த வெற்றி தொடர்பில் தனக்கு கிடைத்த முதற்கட்ட அறிவித்தலை அவர் நம்பவில்லை எனவும், இது ஒரு மோசடி அழைப்பு என்று தான் நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண், வெற்றி பெற்ற பணத்தில் தனது கடனை செலுத்தா தீர்மானித்துள்ளதுடன், வேலையை விட்டுவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிட இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கிடைத்த அதிகபட்ச பரிசுதொகை இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது.
