இன்று (03 .02) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பில் சில வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை (04 .02) நடைபெறவுள்ள 75 வது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை நிகழ்ச்சி முடியும் வரை இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ காணும் வீதிகளே இவ்வாறு மூடப்படவுள்ளது,
சுதந்திர சதுக்க சுற்றுவட்டம், சுதந்திர அவென்யூவில் இருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கிய நுழைவு,
ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை சந்தியிலிருந்து பதனம் மாவத்தை நோக்கிய நுழைவு.
பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை, இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி நுழைவு மூடப்படவுள்ளது.
