மின்வெட்டுக்கு எதிரான மனு குறித்த தீர்மானம்!

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட விசாரணைகளின் பின்னர், சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

அதன்படி, குறித்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? இல்லையா? என்ற தீர்ப்பும் மனுவில் கோரப்பட்டுள்ள மின்வெட்டை தடுக்கும் இடைக்கால உத்தரவு மீதான முடிவும் அன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

 

மின்வெட்டுக்கு எதிரான மனு குறித்த தீர்மானம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version