உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியுமென நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ளது. தேர்தலை நடத்த கூடாதென நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L பீரிஸ் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துத்துக்கொண்டு வழங்கிய தீர்ப்பிலேயே நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்தல் உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடைபெறவுள்ளதாகவும், அதன் காரணமாக தேர்தலை தடை செய்ய வேண்டிய தேவைகள் இல்லை எனவும் நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
