உலகின் மிகப்பெரிய கப்பலான எவர் ஏஸ், எவர் கிரீன்) (Ever Ace ,Ever Green) கொள்கலன் கப்பல் இலங்கை கொழும்புதுறைமுகத்தில் தற்சமயம் நங்கூரமிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்து, ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயெஸ் கால்வாயூடாக பயணித்த கப்பல் இன்று (06.10) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டு தரித்து நிற்கிறது.
400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த கப்பல் 23,992 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு தனதுபயணத்தை ஆரம்பித்துள்ளது.
உலகின் 24 துறைமுகங்களிற்குள் மட்டுமே இந்தக் கப்பல் உட்கொண்டு சென்று தரித்து நிறுத்த முடியும். அதில்தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பலை உள்ளெடுக்கும்ஆழமும் கொள்ளளவும் கொண்ட சகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
