பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று (24.02) மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும்போதும், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய சந்தர்ப்பங்களிலும் மக்கள் அதிக அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version