பாணந்துறை – பின்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர் மீதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
