இன்று (01.03) விசேட கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவர் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிச் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
