ஆப்கானிஸ்தானின் ஜுர்ம், படக்ஷான் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய தலைநகர் புதுடெல்லி வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரையில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.