இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பழுதடைந்திருக்கலாம் என சந்தேகம்!

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன, இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்றுமதி – இறக்குமதி சட்டத்தை மீறும் வகையில் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று முட்டைகளின் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version