நாட்டில் இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் பதிவு!

கொஸ்கம மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இரண்டு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகேவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக நிலவி வந்த தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனமலேவத்த பகுதியில் வாய்த்தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version