648 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

உலக நீர் தினத்தை முன்னிட்டு அடியபுளியங்குளம் குடிநீர் விநியோக அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (28.03) பொதுமக்களின் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்சிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அடியபுளியங்குளம், புதுக்குளம், வளவாய்க்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 648 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக 190.5 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.

விவசாயத்திற்கு, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றுக்கு தண்ணீரை அதிகபட்சமாக பயன்படுத்த இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பசுமை காலநிலை நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கம் ‘வவ்கம் புபுதுவ’ திட்டத்திற்கு நிதியுதவி வழங்குவதுடன், இதற்கான தொழில்நுட்ப பங்களிப்பு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தினால் வழங்கப்படுகிறது.

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பிரதேச அரசியல் அதிகார சபையின் பிரதிநிதிகள் குழுவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பாரதிதாசன், வவ்கம் புபுதுவ திட்டத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

648 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version