வெப்பமான காலநிலையால், உடலைக் குளிர்விக்கும் இளநீருக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களால் விரும்பப்படும் இளநீரின் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்ட இளநீர் ஒன்றின் விலை இன்று 200 ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வெளிநாட்டவர் ஒருவருக்கு இளநீர் ஒன்று 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.