பட்டாசு கடையில் தீ விபத்து!

நேற்று (13.04) இரவு கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பட்டாசு கடை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கிரியுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில், கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்துள்ளதுடன், இருபுறமும் இருந்த இரண்டு கடைகளின் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply