இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்நாட்டு பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட் கால்நடை பண்ணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றும் நாளையும் மேல், தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் கடும் வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதையடுத்து மில்கோ நிறுவனம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
இதன் மூலம், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை வெளியில் வைக்காமலிருப்பதன் மூலமும், இந்த காலகட்டத்தில் குடிப்பதற்கு போதுமான தண்ணீரை வழங்குவதன் மூலமும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும், அதிக அவதானமாக செயற்படுமாறும் மில்கோ வேண்டுகோள் விடுத்துள்ளது.