இந்த வருடம் நெற்செய்கைக்கு தேவையான உரத்தின் விலையை 4500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
50 கிலோ கிராம் எடை கொண்ட ஒரு மூட்டை உரம் 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்த விலை விவசாயிகளுக்கு அதிக செலவை ஏற்படுத்துவதால், இந்த விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உரங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் உர நிறுவனங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளமையால், இந்தப் வர்த்தக போட்டியின் அனுகூலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.