ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24.04) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
4.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.