நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02.04) காலையில் அல்லது பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் 75 மி.மீ அதிக மழை பெய்யும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சந்தர்ப்பங்களில் மின்னலினால் ஏற்படும் அபாயங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version