இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்பு – சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் விளக்கமறியலில்!

களுத்துறையில், 16 வயதான பெண் ஒருவரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (06.05) களுத்துறை பிரதான வீதியில் விடுதி ஒன்றுக்கு பின் புறமாக ரயில் பாதைக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த பெண், மற்றுமொரு பெண் மற்றும் இரு ஆண்களுடன் குறித்த விடுதிக்கு சென்று, அறைகளை பதிவு செய்துள்ளார். சில மணி நேரங்களில் ஒரு ஆணும், பெண்ணும் அந்த இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் இறந்த பெண்ணுடன் இருந்த ஆணும் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது குறித்த பெண்ணுடன் இருந்த ஆண் அங்கிருந்து தப்பி சென்றுள்ள நிலையில், அவரை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணும், ஒரு ஆணும், அவர்கள் பயணித்த வாகனத்தை ஓட்டிச்சென்ற ஆணும் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மே 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் இது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version