அரசு மருத்துவமனைகளில் புதிய வசதி!

அரசு மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் வார்டு வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை பிரஜைகளுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண வார்டுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (09.05) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கொடுப்பனவுகள் தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version