களுத்துறை சம்பவம் – பிரதான சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

களுத்துறையில் யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேக நபரை மே மாதம் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

யுவதியின் மரணம் தொடர்பான விசாரணைகளில், அவர்கள் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் நேற்றைய தினம் (11.05) கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 15ம் திகதி வரை அவரையும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியர் ஒருவரிடமிருந்து குறித்த யுவதிக்கு கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த ஆசிரியருக்கும், உயிரிழந்த யுவதிக்கு இடையிலான தொடர்பு தொடர்பில் பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version