தொல்பொருள் செயற்பாடுகளுக்கு சர்வதேச கண்காணிப்பு – சாணக்கியன் MP

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரினி ஜொரன்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal) மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் டஞ்சா கொங்கிரிப் (Tanja Gonggrijp) ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது தமிழர் பிரதேசங்கள் தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப் படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சாணக்கியன் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

“இதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது “மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்காலத்தில் முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் எமது மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது” என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெறும் காணி அபகரித்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு பிரச்சினை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும், இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்ட அதேவேளை, சமகால அரசியல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

தொல்பொருள் செயற்பாடுகளுக்கு சர்வதேச கண்காணிப்பு - சாணக்கியன் MP
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version