மன்னாரிலுள்ள வீடொன்றில் நேற்று (15.05) மாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிரடிப்படையினர் (STF) குறித்த இடத்தை சுற்றிவளைத்து ICE கையிருப்புகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, போதை பொருட்களுடன் 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு சந்தேக நபர் STF உத்தியோகத்தர்களை கத்தியால் தாக்க முற்பட்டதாகவும், இதன் போது அதிகாரி ஒருவர் சந்தேகநபரை எச்சரிக்கும் வகையில் அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பேசலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஓருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எருக்கலம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டாம் சந்தேகநபர் விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.