வவுனியா மாவட்ட நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் உள்ளிட்ட நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நேற்று (05.06) நியமக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோருக்கே மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்துள்ளார்.