பச்சிலைப்பள்ளி மக்களுக்கான விசேட அறிவித்தல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் நலன்புரி நன்மைகள் சபையின் நலன்புரி நன்மைகள் சபை கொடுப்பனவு தொடர்பான மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், நலன்புரி நன்மைகள் சபை கொடுப்பனவு தொடர்பான மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் எதிர்வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் (01.07.2023, 02.07.2023, 03.07.2023) ஆகிய விடுமுறை நாட்களிலும் காலை 9மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை பிரதேச செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version