வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (05.07) நடைபெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருநாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34வயதுடைய பெண்ணொருவர், குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கும் வன்னி இராணுவ முகாமில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்கும் இடையில் உறவு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.