இந்தியாவிற்கு சொந்தமானது என கருதப்படும் பாரிய இழுவைப்படகு ஒன்று நேற்று (07.07) மன்னார், நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படைக் கப்பல் மூலம் குறித்த இழுவைப்படகு கரைக்கு இழுத்து வரப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான இழுவைப்படகுகள், பொருட்களை ஏற்றுவதற்கும் நீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை கப்பல்களுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் வீசிய கடும் காற்றின் காரணமாக குறித்த கப்பல் மன்னாரில் கரையொதுங்கியிருக்கலாம் என தலைமன்னாரம் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மற்றும் தலைமன்னார் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.