பரவூர்தியுடன் பஸ் மோதி விபத்து – இருவர் மரணம்!

அம்பன்பொலவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியில், யாத்திரை சென்றவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (10.07) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆணும் அம்பன்பொல வைத்தியசாலையிலும், மேலும் 18 பெண்களும் நான்கு ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version