மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் – ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை!

நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படாவிட்டால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம் மாத்திரமே இணைக்கப்பட்டதாகவும், சமகால பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு மீதி இரண்டு பங்கும் சம்பளத்துடன் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version