ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (16.07) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தினுள் ஒருவர் காயங்களுடன் தரையில் கிடப்பதாக பயணி ஒருவர் அளித்த தகவலை அடுத்து பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் நேற்று (15) பிற்பகல் முதல் அப்பகுதியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.