கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை

கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா 02 வார காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில், கோதுமை மா இறக்குமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version