எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் – காஞ்சன!

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (20.7) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  இது தொடர்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், இந்த கூட்டத்தில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) அடுத்த ஆறு மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டங்கள் மற்றும் விநியோகம் மீளாய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்புச் செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், QR ஒதுக்கீடுகளின் சேமிப்புத் திறன், பங்கு தானியக்கமாக்கல், விநியோகம் மற்றும் எரிபொருள் நிலையங்களுடனான ஒப்பந்தங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

எனவே, உரிய மதிப்பீடுகளின் முடிவில், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version