அஸ்மினின் வரிகளில் உருவாகியுள்ள யுத்தத்தின் வடுக்களை சித்தரிக்கும் பாடல்!

யுத்தத்தின் கோர வடுக்களை சித்தரிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடலாசிரியர் அஸ்மின் உருவாக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் பிரபாளினி பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த பாடலை பிரபல பின்னணிப்பாடகரான ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார்.

இந்த பாடல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அஸ்மின், ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியை பாடலின் ஊடாக பதிவு செய்ய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறியிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்களே பாடலைக்கேட்டு கண்கலங்கப்போவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version