ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் திறப்பு!

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் அமைச்சர் நஸீர் அஹமடினால் நேற்று (25.07) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக முன்னால் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார்.

அதேபோல் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா, ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எம்.அல் அமீன், சுற்றாடல் அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாஸர், கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் உள்ளூர் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version