உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் பணிக்கு போட்டிப் பரீட்சை!

பல உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

35 வயதுக்குட்பட்ட ஆசிரியர்களின் சட்டப்பூர்வ தகுதியை பூர்த்தி செய்த பட்டதாரிகள் இந்த போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர கணிதம், விஞ்ஞானம், வெளிநாட்டு மொழிப் பாடங்கள் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் 5450 ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த சில வாரங்களில் விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version