கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய இரவு நேர பயணத்தை”யாழ் நிலா” புகையிரதம் அடுத்த மாதம் நான்காம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புகையிரதம் கல்கிசையில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கும், காங்கேசன்துறைமுகத்தில் இருந்து கல்கிசை வரையிலும் தனது பயணத்தை மேற்கொள்ளும என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகையிரதத்தில் முதலாம், இரண்டாம் வகுப்புகள் காணப்படுவதுடன் இதற்கான முதலாம் வகுப்பு கட்டணமாக 4000 ரூபா வசூலிக்கப்படும் எனவும், இரண்டாம் வகுப்பிற்கு 3000 ரூபாவும், மூன்றாம் வகுப்பிற்கு 2000 ரூபாவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.