இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (30.07) காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துகுள்ளாகியுள்ளது.
ஓட்டுநருக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.