வவுனியாவை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31.07) காலை சென்றடைந்துள்ள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த  மரைன் பொலிஸார் அவர்களை  மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version