எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று (31.07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீட்டர் ஒன்றின் விலை இரண்டு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 306 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 258 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 226 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனமும் குறித்த விலைத் திருத்தத்தை பின்பற்ற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version