கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மற்றுமோர் மரணம் பதிவு!

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த தர்கா நகரினை சேர்ந்த 10 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த குழந்தையானது வயிற்றுவலி காரணமாக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர்  பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தாயார் தெரிவித்துள்ளார். 

அத்துடன்  குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version