சர்வதேச குறும்பட விழாவில் இலங்கையரின் குறும்படமும் தெரிவு!

International Documentary & Short Film Festival of Kerala என்பது இந்தியாவின் கேரளாவில் நடக்கும் ஓர் முக்கியமான திரைப்படவிழா ஆகும். இந்த திரைப்படவிழா கடந்த பதினைந்து ஆண்டுகளாக கேரளாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் நடைபெறும் விழாவில் 53 குறும்படங்கள் தெரிவுசெய்யபட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளின் படங்களுடன், இலங்கை சார்பாக “எல்லையற்று விரிகிறதோர் இரவு” தெரிவாகியுள்ளது.

குறித்த குறும்படமானது முல்லைத்தீவு, முள்ளியவளையில் வசிக்கும் வேல்ராஜா சோபன் என்பவர் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். இந்த குறும்படம் சிறிய பொருட்செலவுடன், நண்பர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் எடுக்கபட்டது.

அத்துடன் இதில் ராசையா லோகநாதன், செல்வராஜ் லீலாவதி மற்றும் ஜெனோஷன் ஜெயரட்ணம் முதன்மை காதாபாத்திரங்களாக நடித்து இருக்கிறார்கள். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் உதவி ஒளிப்பதிவாளராக திலீப் லோகநாதனும், உதவி இயக்குனர் மற்றும் Co – Writerறாக புவனேஷ்வரன் பிரஷாந்த என்பவரும், இரண்டாவது உதவி இயக்குனாராக Rj பெனயா என்பவரும், கள உதவியாளராக காந்தரூபன் என்பவரும், Foley & Sound Mix புவனேந்திரன் பிரணவன் என்பவரும் செய்திருக்கிறார்கள்.

சர்வதேச குறும்பட விழாவில் இலங்கையரின் குறும்படமும் தெரிவு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version